நடிகைகளுடன் நெருக்கம், அவமானம்; தனுஷ் - ஐஸ்வர்யா பிரிய காரணம் இதுதான்!

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth Divorce
By Sumathi Apr 10, 2024 09:30 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்த காரணம் தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.

dhanush - aishwarya

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையிலும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், மனுவில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி குறிப்பிட்டுள்ளனர். தற்போது இதற்கு காரணமாக சில நடிகைகளுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருந்தது தான்.

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

விவாகரத்து

மேலும், தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதில் ஆரம்பித்த பிரச்சினைதான் பூதாகரமாக வெடித்தது.

நடிகைகளுடன் நெருக்கம், அவமானம்; தனுஷ் - ஐஸ்வர்யா பிரிய காரணம் இதுதான்! | Dhanush Aishwarya Rajinikanth Divorce Reason

அந்தப் கோபத்தில் தான் நடிகர் தனுஷ் அதே போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு அரண்மனையை கட்டி அதில் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் உட்கார வைத்துள்ளார் என்கின்றனர். ஆனால், விவாகரத்து குறித்த காரணம் தொடர்பாக எதுவும் அதிகாரப்பூர்வ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.