மது போதையில் சண்டையிட்டு பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா..வெளியான பரபரப்பு தகவல்..!

Dhanush Aishwarya Tamil Cinema
By Thahir Jun 29, 2022 09:40 AM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம் - விவாகரத்து 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

மது போதையில் சண்டையிட்டு பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா..வெளியான பரபரப்பு தகவல்..! | Dhanush Aishwarya Break Up Drinks

விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேளையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.

ஒரே இல்லத்தில் இருவர்

அதை தொடர்ந்து மேலும் மற்றொரு தகவல் வெளியானது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.

விவாகரத்து அறிவித்தபின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மது போதையால் வந்த விளைவு 

இந்த நிலையில் அவர்களின் விவகாரத்து குறித்து அண்மை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து சினிமா வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

மது போதையில் சண்டையிட்டு பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா..வெளியான பரபரப்பு தகவல்..! | Dhanush Aishwarya Break Up Drinks

கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மது விருந்தில் கலந்து கொண்டு ஒன்றாக அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் நீ எனக்கு வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து 16 ஆம் தேதி தனித்தனி அறையில் தங்கியுள்ளனர்.இதையடுத்து இருவரும் பேசி பிரிந்துவிடலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் ஜனவரி 17 ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர்.இதனிடையே தான் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரகசியமாக சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் இருவரும் மதுபோதையில் சண்டையிட்டு பேசியது தொடர்பாக வேதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.