தமிழக அரசு வாதம் - ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு!
Tamil nadu
By Sumathi
2 years ago
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி
உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்,
அனுமதி மறுப்பு
அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர். மதுரை, இராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.