Wednesday, Jun 18, 2025

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு!

Delhi India
By Jiyath a year ago
Report

18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு! | Delhi Govt Provides Rs 1000 To All Women

இந்த உதவித்தொகை மாதா மாதம் நேரடியாக பெண்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த 1000 ரூபாய் என்பது ஏழை மக்களுக்குப் பெரியளவில் உதவுவதாகவே இருக்கிறது.

மோடி குறித்து தவறாக பதிலளித்த ஜெமினி AI -மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Google!

மோடி குறித்து தவறாக பதிலளித்த ஜெமினி AI -மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Google!

மாதம் ரூ.1000

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில், 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதிய திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு! | Delhi Govt Provides Rs 1000 To All Women

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த திட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.