மகளின் தில்லுமுல்லு வேலையை கண்டுகொண்ட தாய்.. கழுத்தில் கத்தியால் 30 முறை குத்தி கொன்ற கொடூரம்!

Attempted Murder United States of America Death
By Vinothini Sep 27, 2023 07:26 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

தாய் ஒருவர் தனது மகளின் ரகசியத்தை அறிந்துகொண்டதால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கு

அமெரிக்கா, ஓஹியோ மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவை எட்டியுள்ளது. அந்த அப்பகுதியில் வசித்து வரும் 23 வயதான சிட்னி பவல் என்ற கல்லூரி மாணவி. 50 வயதான இவரது தாய் பிரெண்டா பவல் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.

daughter-killed-her-mom-by-stabbing-him-30-time

2020-ல் இவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார், அப்பொழுது தான் இவரது மகளே இவரை கத்தியால் வெறித்தனமாக கழுத்தில் 30 முறை குத்தி கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர், இவரது வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்பொழுது இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

கண்ணில் அல்சரா?.. சாதாரணமாக நினைத்து கிட்டத்தட்ட கண்ணை இழந்த பெண்!

கண்ணில் அல்சரா?.. சாதாரணமாக நினைத்து கிட்டத்தட்ட கண்ணை இழந்த பெண்!

நீதிமன்றம் உறுதி

இந்நிலையில், கல்லூரி மாணவியான சிட்னி பவல் பல்கலைக்கழகத்தில் நடத்தைகளை மீறியதாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தனது தாய்க்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். ஆனால் இவரது தாய் பிரெண்டா இதனை கண்டுகொண்டதோடு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரிக்கவும் முன்வந்தார்.

daughter-killed-her-mom-by-stabbing-him-30-time

இதனால் ஆத்திரமடைந்த மகள் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அவர் கையில் கிடைத்த இரும்பு வாணலியால் தாயின் தலையில் தாக்கி அவரை நிலைகுலையச் செய்தார். அடுத்து சமையலறை கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தில் மட்டும் 30க்கும் மேல் குத்தியுள்ளார்.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது சிட்னிக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2 நாளில் தண்டனை உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றம் வெளியிட உள்ளது.