நீ எப்படி உயிரோட இருக்கனு பாக்குறேன், சைக்கோ கணவன் மிரட்டல் - மகளை மீட்டு தர வேண்டி தாய் கதறல்!

Crime Pudukkottai
By Vinothini Jul 18, 2023 01:33 PM GMT
Report

புதுக்கோட்டையில் ஒருவர் தனது மனைவியை மிரட்டி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரை காதலித்து வந்தார், ஆனால் இவரது பெற்றோர் இவர்களது கடப்பிகளை எதிர்த்தனர்.

psycho-husband-kidnapped-his-wife

தொடர்ந்து, கடந்த 2022 டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இவர் மயிலாடுந்துறையில், தனியாக வாடைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளர்.

கணவன் மிரட்டல்

இந்நிலையில், இவர் திருமணமான 4 மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொடர்பு கொண்ட மகேஸ்வரி தனது கணவன் சைக்கோ போல தன் மீது சந்தேகப்படுவதாகவும் அடுத்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால் இவரது தாய் தனது உறவினர்களுடன் சென்று தனது மகளை அவரிடமிருந்து பிரித்து அழைத்துவந்துள்ளார். அப்பொழுது வீட்டை விட்டா போகிறாய் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

psycho-husband-kidnapped-his-wife

கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாவை வலுக்கட்டாயமாக இழுத்து கடத்தி சென்றார். அவரது தாயார் அன்று இரவே போலீசிடம் புகாரளித்தார்.

மேலும், கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை அவர் போலீசாரிடம் வழங்கினார். அதில் "உன் உயிர் ஊஞ்சலாடுது, மரணம் நெருங்குது" என அவர் கூறி உள்ளார். ஆடியோவை கொடுத்துவிட்டு தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.