ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த ஜோடி - இது புதுசா இருக்கே!
ஜோடி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
கடலுக்கடியில் திருமணம்
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ- தீபிகா. இவர்கள் இருவரும் கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என எண்ணியுள்ளனர்.

எனவே ஆழ்கடலில் திருமணம் செய்யலாம் எனவும் முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர்.
என்ன காரணம்?
அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தொடர்ந்து தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து நிகழ்வை நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 5 பேர் அவர்களுடன் உடனிருந்தனர்.

இதுகுறித்து பேசிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், இது முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை.
முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan