கப்பலோடு மூழ்கிய 200டன் தங்க புதையல் - முண்டியடிக்கும் 3 நாடுகள்!
கரீபியன் கடலில் மூழ்கிக் காணாமல்போன கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.
சான் ஜோஸ் கப்பல்
ஸ்பெயினின் மன்னர் ஐந்தாம் பிலிப்புக்குச் சொந்தமான சான் ஜோஸ் கப்பல், 1708-ம் ஆண்டு, மே மாதம் பனாமாவின் துறைமுக நகரான போர்ட்பேலோவிலிருந்து புறப்பட்டது. அதில், பெரு நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த மரகதக் கற்கள் உள்ளிட்ட பொக்கிஷங்களுடன், 600 வீரர்கள் பயணித்தனர்.
இந்த புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 1.66 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்த சான் ஜோஸ் கப்பல் கரீபியன் கடலில் காணாமல்போனது.
கொலம்பியா முடிவு
இந்நிலையில், கொலம்பியாவின் கடலுக்கு அடியில் 600 மீ ஆழத்தில் கண்டுபிடித்திருப்பதாக கொலம்பியா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்குப் பின் ஸ்பெயின், அமெரிக்கா, கொலம்பியா நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருக்கும் பொக்கிஷங்கள் தங்களுக்கே உரியவை என இந்த 4 நாடுகளும் உரிமைகொண்டாடுகிறது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த கடல் மீட்பு நிறுவனமான எஸ்.எஸ்.ஏ.,1980-களியிலேயே சான் ஜோஸைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், அதிலிருந்து கிடைக்கும் சொத்துகளில் 50 சதவிகித உரிமை தங்களுக்கே சொந்தம் என தெரிவிக்கிறது. இதற்கிடையில், கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் பதவிக்காலம் 2026-ல் முடிகிறது.
அதற்குள், சான் ஜோஸ் புதையல் கப்பலை வெளிக்கொண்டுவர வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்தப் புதையல் கப்பலை வெளியே எடுத்துச் சுத்தம் செய்யவும், அதிலிருந்து எடுக்கப்படுபவற்றைப் பதிவுசெய்யவும், ஆய்வு செய்யவும் ஒரு தொல்பொருள் ஆய்வகத்தை நிறுவ அரசு தயார் நிலையில் இருக்கிறது என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.