மூழ்கிய டைட்டானிக்; பயங்கர சக்தி ஏதோ இருக்கு - ஜேம்ஸ் கேமரூன் பகீர்
டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் ஏதோ சக்தி உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கி
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கியில் சென்ற ஐந்து பேர் பலியான சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசியுள்ள டைட்டனிக் படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், டைட்டன் நீர்மூழ்கி கப்பல் திங்களன்று வெடித்து சிதறிய விஷயம் எங்களுடைய குழுவின் மூலமாக எனக்குத் தெரிந்துவிட்டது.
அதன் பிறகு எனக்கு தெரிந்த நபர்களிடம் நான் சேகரித்த தகவல் படி, நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் அறிந்தேன். இதை கேள்விப்பட்டதுமே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதேசமயம் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஏதோ சத்தம் கேட்டதாகவும் சொன்னார்கள்.
ஜேம்ஸ் கேமரூன் தகவல்
அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துவிட்டது என்று. டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்திருப்பது தன்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்த பயணங்களின் போது தனக்குக் கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
டைட்டானிக் கப்பல் சார்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சுமார் 33 முறை கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை இவர் பார்வையிட்டுள்ளார். சொந்தமாக இவரே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கி, அதில் வெற்றிகரமாக பயணமும் மேற்கொண்டுள்ளார். கடலுக்கு அடியில் அதிக ஆழத்திற்கு சென்றதாக கின்னஸ் ரெக்கார்டையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.