மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறல் - 5 பணக்காரர்களும் உயிரிழப்பு!
நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பல்
டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்க நிறுவனமான ஓஷன் கேட் நிறுவனம் சிறப்பு சேவையை அளித்து வந்தது. இதில், பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் ஜூன் 19இல் கடலுக்குள் சென்றனர். இவர்கள் சென்று 1.45 மணிநேரத்திலேயே நீர் மூழ்கி கப்பல் தொடர்பை இழந்து மாயமானது.
5 பேரும் உயிரிழப்பு
இதனை கடந்த 4 நாள்களாக 22 அடி நீள நீர்மூழ்கியை பல நாடுகளின் ஆய்வாளர்களும் தேடி வந்தனர். இந்நிலையில், கனடா நாட்டின் கப்பல் படையினர் நேற்று தேடியபோது காணாமல் போயிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அந்த சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதில் ஆக்சிஜன் கொள்ளிருப்பு 96 மணிநேரமே இருந்தது குறிப்பிடத்தக்கது.