12-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை - சரணடைந்த மாணவன் அளித்த பகீர் வாக்குமூலம்!

Tamil nadu Coimbatore Crime Death
By Jiyath Feb 18, 2024 03:13 AM GMT
Report

முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவன் கொலை 

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

12-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை - சரணடைந்த மாணவன் அளித்த பகீர் வாக்குமூலம்! | College Student Murdered School Student In Kovai

உடனடியாக அந்த மாணவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், மாணவனை கொலை செய்த சம்பவத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் - சென்னையில் கொடூரம்!

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் - சென்னையில் கொடூரம்!

வாக்குமூலம் 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவரும், கொலை செய்யப்பட்ட மாணவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கொலை செய்த மாணவர் 10-வது படிக்கும்போது, அவரின் தங்கையை உயிரிழந்த மாணவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

12-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை - சரணடைந்த மாணவன் அளித்த பகீர் வாக்குமூலம்! | College Student Murdered School Student In Kovai

இதுகுறித்து உயிரிழந்த மாணவரிடம் சென்று கேட்டதற்கு, தன் நண்பர்களுடன் இணைந்து அவரை தாக்கியுள்ளார். இதனால் பழிவாங்க திட்டமிட்ட அந்த மாணவன், காத்திருந்து அந்த மாணவரை கொலை செய்துள்ளார்.

மேலும், தன்னை அந்த மாணவன் தான் அதிகம் தாக்கினார் என்பதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.