பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் - சென்னையில் கொடூரம்!

Tamil nadu Chennai Crime
By Jiyath Feb 16, 2024 11:15 AM GMT
Report

2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். 

குப்பைத் தொட்டியில் குழந்தை 

சென்னை பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு அருகிலுள்ள குப்பை கொட்டும் இடத்திலிருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் - சென்னையில் கொடூரம்! | Baby In Chennai Rescued From Dustbin

அந்த பகுதி மக்கள் பூனை கத்துவதாக நினைத்திருந்த நிலையில், நேற்று சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் எறும்புகள் மொய்த்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்துள்ளது.

திருப்பதி: சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் - விபரீத ஆசையால் நேர்ந்த சோகம்!

திருப்பதி: சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் - விபரீத ஆசையால் நேர்ந்த சோகம்!

போலீசார் விசாரணை 

உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த பெண் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் - சென்னையில் கொடூரம்! | Baby In Chennai Rescued From Dustbin

தற்போது குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், குழந்தையை 2 தினங்களுக்கு முன்பு வீசி சென்றதும், 2 தினங்களாக குழந்தை அழுதபடி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.