கரூரில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
M K Stalin
By Thahir
3 years ago
கரூரில் இன்று 80 ஆயிரத்திற்கு அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கரூரில் முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரிகளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக நேற்று கரூர் சென்றார். இதையடுத்து கரூர் பயணியர் மாளிகையில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு வருகை தரும் அவர்,
80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் வருகையை அடுத்து கரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.