காதலர் சொன்ன அந்த வார்த்தை.. எடையை அதிகரித்த மாடல் அழகி, விளைவாக நேர்ந்த சோகம் - என்ன நிகழ்ந்தது?
காதலருக்காக எடை அதிகரித்த மாடல் அழகிக்கு நேர்ந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடல் அழகி
சீனாவில் பெண் ஒருவர் மாடலாக பணிப்புரிந்து வருகிறார், இவர் உடல் எடையை 50 கிலோவிற்கு மேல் அதிகரிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்த நிலையில் தான் இவர் காதல் வயப்பட்டார், இருவரும் காதலித்து வந்தனர். பின்ன ஒரு கட்டத்தில் அந்த பெண் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அப்பொழுது அந்த காதலர் "நீ ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறாய்; கொஞ்சமாவது குண்டாக இருந்தால் மட்டுமே நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறியுள்ளார்.

தன் அறைக்குள் கீழே விழுந்து கிடந்த புடின்.. மோசமடைந்து உடல்நிலை, என்னாச்சு? - கமாண்டோ பரபரபப்பு தகவல்!
எடை குறைப்பு
இந்நிலையில், காதலரை நம்பிய இந்த பெண் தனது காதலனுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்தார். இதனால் இவர் ஒரே மாதத்தில் 35 கிலோ வரை உடல் எடையை அதிகரித்தார். பின்னர் காதலனிடம் சென்றுள்ளார், அப்பொழுது இவரது தோற்றத்தை பார்த்த அவர் உடனே தனது காதலை முறித்துக்கொண்டதோடு, இனி நாம் இருவரும் பிரிந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்து மனமுடைந்தார். இவரது உடல் எடையை அதிகரித்ததால் இவரது மாடல் வேலையும் பறிபோனது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.
தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.