பொறுப்பேற்ற அடுத்தநாளே முருகானந்தம் ஐ.ஏ.எஸ் செய்த செயல் -அலறும் அதிகாரிகள்!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Vidhya Senthil Aug 20, 2024 01:39 PM GMT
Report

அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும்.

நா.முருகானந்தம்

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதல்வரின் தனிச் செயலராக இருந்த நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

 பொறுப்பேற்ற அடுத்தநாளே முருகானந்தம் ஐ.ஏ.எஸ் செய்த செயல் -அலறும் அதிகாரிகள்! | Chief Secretary Muruganandamresearch In Hospitals

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

அப்போது அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து காவல்துறை பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும். மருத்துவ மனைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவிக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்  என்று  கூறினார்.

மகளிருக்கு குட் நியூஸ்... பத்திரப்பதிவில் சலுகை, தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

மகளிருக்கு குட் நியூஸ்... பத்திரப்பதிவில் சலுகை, தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

திடீர்  ஆய்வு

மேலும் அவற்றின் காட்சிப்பதிவுகளை மத்தியக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் வார்டுகள், வழித்தடங்கள். பணி அறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சரியான முறையில் விளக்குகள் பொறுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 பொறுப்பேற்ற அடுத்தநாளே முருகானந்தம் ஐ.ஏ.எஸ் செய்த செயல் -அலறும் அதிகாரிகள்! | Chief Secretary Muruganandamresearch In Hospitals

அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும், அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி பெற வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்க வேண்டும். காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ளவேண்டும் என்று தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் கூறினார்.