வாய்ப்பில்லை.. சந்திரயான் 3-ன் தற்போதைய நிலை? - இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!

ISRO Chandrayaan-3
By Vinothini Oct 06, 2023 04:43 AM GMT
Report

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சந்திரயான் 3

இந்தியா நிலவிற்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியது, அதன்பின் பிரக்யான் ரோவரும் வெளி வந்து நிலவில் ஆய்வு செய்தது. பின்னர், செப்.4-ம் தேதி விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உறக்கநிலையில் வைக்கப்பட்டது.

chandrayaan-3-possibility-of-waking

இதனையடுத்து நிலவில் மீண்டும் சூரிய உதயம் ஏற்பட்டதும் செப்.22-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை எழுப்ப முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை.

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்.. வாயில் நுரைதள்ளி இறந்த 11 மாத குழந்தை!

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்.. வாயில் நுரைதள்ளி இறந்த 11 மாத குழந்தை!

விஞ்ஞானிகள் தகவல்

இந்நிலையில், நிலவில் கடுமையான குளிர் இருக்கும். -200 செல்சியஸ் என்ற அளவில் கடுங்குளிர் இருக்கும். இந்த குளிரை தாங்கும் வகையில் சந்திரயான் 3 கருவிகள் வடிவமைக்கப்படவில்லை. 1 சந்திர நாள் (பூமியில் 14 நாட்கள்) சூரிய ஒளி இருக்கும் போதும் மட்டும் செயல்படும்படி கருவிகள் வடிவமைக்கப்பட்டது.

chandrayaan-3-possibility-of-waking

சந்திரயான் 3-ன் முன்னணி மையமான யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் எம் சங்கரன் கூறுகையில், “லேண்டர் மற்றும் ரோவர் எழுந்திருக்கவில்லை. அடுத்த 14 நாட்களில் இந்த சந்திர இரவு முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், அந்த ஆப்ஷனை நாங்கள் நிறுத்தவில்லை.

இந்த பணியானது ரிமோட் சென்சிங் அல்லது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் போன்றது அல்ல என்பதால், விக்ரம் மற்றும் பிரக்யான் பேலோடுகளின் தரவுகளின் அளவு பெரியதாக இருக்காது, ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் முதல் நாளில் வேலை செய்தபோது நாம் பெற்ற விளைவுதான். தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.