அண்ணனை திருமணம் செய்த தங்கை; தகாத முறையால் எதிர்ப்பு - இறுதியில் விபரீத முடிவு!

Karnataka Relationship Death
By Sumathi Feb 04, 2024 10:31 AM GMT
Report

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு 

கர்நாடகா, மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா(24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும் இவரது உறவினர் சசிகலா(20) என்பவரும் காதலித்து வந்தனர்.

kollappa - sasikala

இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சசிகலாவுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த கொல்லப்பா சசிகலாவை சந்திக்க முடிவு செய்து அவரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

20 வயது மாணவனுடன் 35 வயது பேராசிரியை தகாத உறவு; 2 முறை கர்ப்பம் - விளாசிய நீதிபதி!

20 வயது மாணவனுடன் 35 வயது பேராசிரியை தகாத உறவு; 2 முறை கர்ப்பம் - விளாசிய நீதிபதி!

காதல் ஜோடி தற்கொலை

தொடர்ந்து கோவில் ஒன்றில் திருமணம் செய்தனர். உடனே இருவீட்டாரும் தேடி அழைந்துள்ளனர். இதனால் தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். முன்னதாக இதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

suicide

உடனே இதையறிந்து சம்பவ இடம் விரைந்த பெற்றோர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின், போலீஸார் உடல்கலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.