சொந்த அக்காவையே.. தம்பி செய்த காரியம், போலீசுக்கு போன அந்த கால் - வெறிச்செயல்!

Attempted Murder Death Sivagangai
By Vinothini Nov 22, 2023 09:45 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தனது அக்காவையே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் க்ரிஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம், இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவயானி மற்றும் கண்ணன் என்று 2 பிள்ளைகள் உள்ளனர். அவரது மகள் தேவயானி பி.ஏட் முடித்துள்ளார், இவர் வீட்டில் இருந்தபடியே ஆசிரியர் தேர்விற்கு படித்து வந்துள்ளார்.

brother-killed-his-sister-in-sivagangai

அவரது மகன் கண்ணன் தந்தையின் கறிக்கடையில் அவருக்கு துணையாக வேலை பார்த்து வந்தார். இந்த சமயத்தில் தேவயானி திடீரென வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அவரது தம்பி போலீசுக்கு போன் செய்து கூறியுள்ளார்.

10-ம் வகுப்பு மாணவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய ஆசிரியை - கொடுமை!

10-ம் வகுப்பு மாணவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய ஆசிரியை - கொடுமை!

கொலை

இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பார்த்தபொழுது அந்த பெண் கழுத்து அறுபட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், விசாரணையை தொடங்கிய போலீசார் தகவல் கொடுத்த அவரது தம்பியை விசாரிக்க முயன்றபோது அவர் தலைமறைவானார்.

brother-killed-his-sister-in-sivagangai

பின்னர் தானே வந்து போலீசில் சரணடைந்த அவர் தான் தனது அகவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், குடும்ப தகராறினால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.