ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை, அடித்தே கொன்ற மருமகன் - இளைஞர் வெறிச்செயல்!

Attempted Murder Chennai Sexual harassment Death
By Vinothini Jul 31, 2023 06:06 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தனது பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை

சென்னை, கொடுங்கையூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவில் 47 வயதான வேளாங்கண்ணி என்பவர் தனது கணவர் அன்பு உடன் வசித்து வருகிறார். சாதாரண கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அன்பு வேலைக்குச் சென்ற போது மகன் மற்றும் மகள் இருவரும் வீட்டில் இல்லை.

women-killed-by-her-brothers-son

மாலையில், அவரது மகன் மரியா லாரன்ஸ் வீட்டிற்கு வந்தபோது, ​​அவரது தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில், கொடுங்கையூர் தனிப்படை போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் இவரது வீட்டிற்குள் வந்தது தெரியவந்தது அவர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் மருமகன் 21 வயதான ஒய் அகஸ்டின் அருண் என்றும் அவரது நண்பர் ஏ சாலமன் (22) என்பது தெரியவந்தது.

women-killed-by-her-brothers-son

இருவரும் அத்தை வீட்டிற்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் அகஸ்டின் வாக்குமூலம், "எனக்கு காம உணர்வு அதிகமானதால் நண்பர் சாலமனுடன், எனது அத்தை வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அத்தை மட்டும் தனியாக இருந்தார்.

வீட்டுக்குள் சென்று அத்தையிடம் எனது ஆசைக்கு இணங்குமாறு சொன்னேன். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே பயத்தில் அவரை அடித்து கொன்றேன். பிறகு நண்பருடன் தப்பி சென்றேன்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.