10-ம் வகுப்பு மாணவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய ஆசிரியை - கொடுமை!

Sexual harassment Uttar Pradesh POCSO Crime
By Vinothini Nov 20, 2023 10:42 AM GMT
Report

பெண் ஆசிரியை ஒருவர் 10-ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர். இவரது பள்ளியில் பெண் ஆசிரியை ஒருவர் அவருடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரது மதத்திற்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

sexual harassment

இது குறித்து அறிந்த அந்த மாணவரின் பெற்றோர், அவரது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அப்பொழுது அவரகள் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், பெண் ஆசிரியை மீது கன்டோமென்ட் பகுதி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

10 வருஷமா குழந்தை இல்லை.. பரிகாரத்திற்கு வந்த பெண்ணுக்கு பூசாரி செய்த காரியம் - கதறும் கணவன்!

10 வருஷமா குழந்தை இல்லை.. பரிகாரத்திற்கு வந்த பெண்ணுக்கு பூசாரி செய்த காரியம் - கதறும் கணவன்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், அந்த மாணவரின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். இதனை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பெண் ஆசிரியை, அவரது கணவர், அவரது சகோதரர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

pocso

மேலும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் சட்டவிரோதமாக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.