எல்லாம் பிரியாணிக்காக.. 55 முறை கத்தியால் தொண்டையிலேயே குத்தி கொன்ற சிறுவன் - கொடூரம்!

Attempted Murder Crime Death
By Vinothini Nov 25, 2023 05:46 AM GMT
Report

சிறுவர் ஒருவர் பிரியாணிக்காக கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

டெல்லி, வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 17 வயது சிறுவன் அவரை 55 முறை கத்தியால் தொண்டையில் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் அந்த நண்பர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

boy-killed-a-man-for-briyani-in-delhi

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது, அதில் அவர், உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்டு கேமராவை நடன அசைவுகளை செய்துகாட்டி மிரட்டினார். இது குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சொந்த அக்காவையே.. தம்பி செய்த காரியம், போலீசுக்கு போன அந்த கால் - வெறிச்செயல்!

சொந்த அக்காவையே.. தம்பி செய்த காரியம், போலீசுக்கு போன அந்த கால் - வெறிச்செயல்!

விசாரணை

இந்நிலையில், போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது அந்த சிறுவனை கணடனர் அப்பொழுது அவர் இயல்பாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில், "கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான்.

arrest

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்" என்று தெரிவித்தனர்.

மேலும், தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்றும் அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.