புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தந்தை மீது போலீசில் புகாரளித்த 13 வயது சிறுவர்!

Tamil nadu Vellore
By Vinothini Sep 03, 2023 10:43 AM GMT
Report

சிறுவர் ஒருவர் தனது தந்தை மீது போலீசிடம் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகராறு

செய்த தந்தை வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர், இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா, இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

13-year-old-boy-complaints-his-father

குடும்ப தலைவரான ஜாபர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், இவரது மகன்களையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மனம் உடைந்து பரானா மருந்து குடித்தார். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாராளித்த சிறுவர்

இந்நிலையில், ஜாபருடைய 2-வது மகன் 13 வயதான நபில் என்பவர், அவரது சைக்கிளை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் அளித்துள்ளார். அதில், "தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை. என்னுடைய அண்ணன் கபில் (15) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.

13-year-old-boy-complaints-his-father

நான் இங்கு சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். என்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன். தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதால் மனவேதனை அடைந்த என்னுடைய அம்மா நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என் தந்தையை தயவுசெய்து கைது செய்து ஜெயிலில் அடையுங்கள்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பிவைத்தனர்.