ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் - திமுக மீது குற்றம் சுமத்தும் தமிழிசை சௌந்தரராஜன்!

Smt Tamilisai Soundararajan Tamil nadu BJP Lok Sabha Election 2024
By Jiyath Apr 15, 2024 06:33 AM GMT
Report

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் ஓடிய விவகாரத்தில் திமுகவை குற்றம்சாட்டியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன்

தென்சென்னை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் கலந்துரையாடும் வகையில் ஜூம் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் - திமுக மீது குற்றம் சுமத்தும் தமிழிசை சௌந்தரராஜன்! | Bjp Tamilisai Soundararajan Accuses Dmk

இந்த மீட்டிங்கின்போது திடீரென ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் "அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன்.

அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால், ஜூம் (Zoom) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மீட்டிங்கில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன.

இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்..? ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்..? ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

குற்றச்சாட்டு 

இதன் மூலம் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்னைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதை செய்தனர்.

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் - திமுக மீது குற்றம் சுமத்தும் தமிழிசை சௌந்தரராஜன்! | Bjp Tamilisai Soundararajan Accuses Dmk

குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை இதற்கு நேரடியாக குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணைய வெளியில் சுதந்திரமாக பேசக்கூட முடியவில்லை.

இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும். அரசியலை தூய்மை படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.