சட்டசபையில் ஆபாச பேச்சு.. கடுமையாக சாடிய பாஜக - பரபரப்பு!
முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் ஆபாசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை
பீகார் சட்டமன்றத்தில் நேற்று அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவரங்களை முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல்செய்து பேசினார். அதில் அவர், "பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கிறது.
படித்த பெண், திருமணமாகிச் செல்லும்போது அவர் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது.
எனவே, பெண் கல்வியறிவு பெற்றிருந்தால் அவருக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.
கொந்தளித்த பாஜக
இந்நிலையில், இவரது பேச்சுக்கு உறுப்பினர்கள் சிரித்தனர். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், பீகார் சட்டசபை இன்று கூடியதும், நிதிஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களை கொண்ட காகிதங்களை ஏந்தியபடியும் அமளியில் ஈடுபட்டனர்.
#WATCH | Bihar CM Nitish Kumar says, "I apologise & I take back my words..." pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023
அவரை பேச விடாமல் கோஷம் எழுப்பினர், அதனால் எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என நிதிஷ் குமார் கூறினார். மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன்" என்று கூறினார்.