ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு அசத்தல் அறிவிப்பு சொன்ன பிரதமர் மோடி!

Narendra Modi Chhattisgarh
By Sumathi Nov 07, 2023 11:09 AM GMT
Report

ரேஷன் கார்டு குறித்த தகவல்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு

சத்தீஸ்கர், சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவுபொருட்களை அரசு தனிநபர்களுக்கு இலவசமாக வழங்கியது.

pm modi

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடியும் இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமான இதன் மூலம் அனைத்துப் பயனாளிகளும் தங்கள் உணவுக்கான உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துகிறது.

24-இல் தடைகளை உடைத்து ...பாஜகவிற்கு ஆதரவு!! நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி !!

24-இல் தடைகளை உடைத்து ...பாஜகவிற்கு ஆதரவு!! நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி !!

பிரதமர் மோடி

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு நடைமுறையில் இருப்பதால், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாகப் பெற முடியும். இதன்மூலம் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாக்குவதாக அறிவித்தது.

ஒரு வருடத்திற்கு (2023 காலண்டர் ஆண்டு) இலவச உணவு தானிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ நடவடிக்கை சில நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.