அரசியலில் களம் காண்கிறாரா தேர்தல் வியூகர்

politics Prashant Kishor strategist
By Jon Mar 04, 2021 12:25 PM GMT
Report

பஞ்சாப் 2022 சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக காங். முதல்வர் அமிரீந்தர்சிங் நியமித்துள்ளார். பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர். 2014 பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சிக்கு அமைக்க இவரது பிரசார வியூகம் கை கொடுத்தது.

தற்போது தமிழக சட்டசபை தேர்தல் பணிகளுக்கு தி.மு.க., தலைமை பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் வரும் பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பணிகளுக்கு பிரசார வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோரை பஞ்சாப் காங். முதல்வர் அமிரீந்தர்சிங், நியமித்துள்ளார் .

இதனால் மீண்டும் காங். ஆட்சிக்கு வந்தால் பிரசாந்த் கிஷோருக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது