தகாத உறவு; மருமகனுக்கு மனைவியை கட்டிவைத்த மாமனார் - பகீர் பின்னணி!

Marriage Relationship Bihar
By Sumathi Apr 30, 2024 09:45 AM GMT
Report

மாமனார் தனது மனைவியை மருமகனுக்கு திருமணம் செய்துவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

பீகார், சாத்ரபல் என்ற பஞ்சாயத்தில் தில்லேஷ்வர்- கீதா தேவி தம்பதி வசித்து வந்தனர். இவர்களது மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

bihar

இதில் கடந்த ஆண்டு சிக்கந்தரின் மனைவி இறந்துவிட்டார். எனவே, சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும், சிக்கந்தருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தன்னைத்தானே திருமணம் செய்த ஷாமா பிந்து  வைரலாகும் வீடியோ

தன்னைத்தானே திருமணம் செய்த ஷாமா பிந்து வைரலாகும் வீடியோ

மாமியாருடன் திருமணம்

அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் மாமனார் தில்லேஷ்வரிடம் கூறியுள்ளனர். அதன்படி, ஒருநாள் தனது மனைவியையும் மருமகனையும், மாமனார் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

தகாத உறவு; மருமகனுக்கு மனைவியை கட்டிவைத்த மாமனார் - பகீர் பின்னணி! | Biha Son In Law Married Mother In Law Affair

அதன்பின், பஞ்சாயத்தில் இருவரையும் நிற்க வைத்து உறவு குறித்து கேட்டதில் இருவரும் அதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, மாமியாருக்கும் மருமகனுக்கும் மாமனார் தில்லேஷ்வரே திருமணம் செய்து வைத்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.