காதல் திருமணம்; மருமகனுக்கு போட்ட ஸ்கெட்ச் - தங்கை பலியான சோகம்!

Attempted Murder Crime Death Erode
By Sumathi Mar 08, 2024 06:14 AM GMT
Report

காதல் திருமணம் செய்த இளைஞரை மாமனார் கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் திருமணம்

ஈரோடு, குருவாயூரப்பன் நகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் சுபாஷ் (24). இவரும் மஞ்சு (22) எனும் இளம்பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

erode

சாதியப் பாகுபாடு காரணமாக பெண் வீட்டார் இவர்களது காதலை ஏற்க மறுத்துள்ளனர். எனவே, இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

காதல் திருமணம் செய்த மகன், தாயை வெட்டிக் கொன்ற தந்தை - உயிருக்கு போராடும் மருமகள்!

காதல் திருமணம் செய்த மகன், தாயை வெட்டிக் கொன்ற தந்தை - உயிருக்கு போராடும் மருமகள்!


பெற்றோர் வெறிச்செயல்

இந்நிலையில், மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து, பாஷ் தனது தங்கை ஹரிணியை (15) இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று வேகமாக வந்து இவர்கள் மீது மோதியுள்ளது.

காதல் திருமணம்; மருமகனுக்கு போட்ட ஸ்கெட்ச் - தங்கை பலியான சோகம்! | Honor Killing In Erode Against Anti Caste Marriage

இதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சுபாஷின் தங்கை உயிரிழந்துள்ளார். சுபாஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையில், மஞ்சுவின் தாய் தந்தை தான் கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.