காதல் திருமணம் செய்த ஜோடி வெட்டி படுகொலை..!

Tamil nadu Thoothukudi Tamil Nadu Police
By Thahir Jul 26, 2022 03:18 AM GMT
Report

காதல் திருமணம் செய்த ஜோடியை பெண்ணின் தந்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதல் 

துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. விவசாயியான இவர் சொந்தமாக வேன் மற்றும் மினி லாரிகளை வாடடைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மகள் ரேஷ்மா 20 வயதான அவர் கோவில்பட்டியில் உள்ள கல்லுாரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவரது எதிர் வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) வயதான கூலி தொழிலாளி. ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் உறவினர்கள்.இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதல் திருமணம் செய்த ஜோடி வெட்டி படுகொலை..! | The Couple Who Married For Love Was Cut And Killed

திருமணம் 

இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு முத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி காதலர்களான ரேஷ்மா, மாணிக்கராஜ் ஆகிய இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறி மதுரையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். மாணிக்கராஜின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்த வந்துள்ளனர்.

தம்பதி வெட்டி படுகொலை 

நேற்று மாணிக்கராஜின் தயார் மகாலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில் புதுமண தம்பதி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

பின்னர் வேலை முடித்து வீடு திரும்பிய மகாலட்சுமி வீட்டில் அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த காட்சி கண்டு கதறி அலறி அடித்து அழுத்துள்ளார்.

இதையடுத்து எட்டயபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் தந்தை கைது 

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை முத்துகுட்டி அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான முத்துகுட்டியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தந்தையே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.