ராஜபோதை: ரகசிய பார்ட்டியில் பாம்பு விஷம்; சிக்கிய பிக்பாஸ் பிரபலம் - பின்னணி இதுதான்!
பிக்பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்விஷ் யாதவ்
உத்தர பிரதேசம், நொய்டாவில் உள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டியில் பாம்பு விஷங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டியில் பாம்புகள் துன்புறுத்தப்பட்டு வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதாகவும்,
பாம்பு விஷம்
பார்ட்டியில் பங்குபெறும் நபர்களுக்கு தடை செய்யப்பட்ட பாம்பு விஷங்கள் சப்ளை செய்யப்படுவதாகவும் விலங்குகள் நல அதிகாரி கௌரவு குப்தா புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சோதனை செய்ததில் பார்ட்டியில் இருந்து ஐந்து நாகப் பாம்புகள், இரட்டை தலை பாம்புகள், ஒரு சிவப்பு நிற பாம்பு, ஒரு மலைப்பாம்பு என ஒன்பது பாம்புகளும், 25 மில்லி தடை செய்யப்பட்டட பாம்பு விஷம் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஒருவராக யூடியூபரும், பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், பாம்புடன் எல்விஷ் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்மீதும் வழக்குபதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றச்சாட்டு போலியானவை என மறுப்பு தெரிவித்ததில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.