தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்; எதற்கு தெரியுமா - அதிர்ச்சி பின்னணி!
அப்பாக்கள், மகள்களை திருமணம் செய்யும் வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
மண்டி
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் மண்டி என்ற பழங்குடியின மக்கள். பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் வசித்து வருகின்றனர். நாட்டின் பிற மக்களிடமிருந்து வேறுபட்டவர்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகள் என அனைத்துமே மாறுபடுகிறது.
அந்த வகையில், இந்த இனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒரு பெண் கணவரை இழந்து கைம்பெண்ணாக மாறினால், அதை இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் அந்தப் பெண்ணை மறுமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விநோத நடைமுறை
இவ்வாறு மறுமணம் செய்யும்போது, அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால், பருவம் எய்தியதும் அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் அந்த ஆண்களிடம் உள்ளது. இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே, பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்வார்களாம்.
தற்போது இந்த இனத்தைச் சேர்ந்த ஓரோலா என்ற பெண்ணின் திருமணம் இதே போன்ற முறையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.