குழந்தை கேட்ட 2வது கணவன் - மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கர்ப்பமாக்கிய கொடூர தாய்!

Sexual harassment Andhra Pradesh Crime
By Sumathi Jul 15, 2023 05:18 AM GMT
Report

கணவனால் மகள்களுக்கு நடந்த கொடுமைக்கு தாய் துணை போகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 2வது கணவன்

ஆந்திரா, வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதால் மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அதனையடுத்து தாய்மாமன் சதீஷ்குமார் (43) என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை கேட்ட 2வது கணவன் - மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கர்ப்பமாக்கிய கொடூர தாய்! | Andhra Woman Allowed Husband To Rape Daughters

இந்நிலையில் தனக்கொரு குழந்தை வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண், தனக்கு இரு குழந்தைகள் பிறந்ததும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 பாலியல் வன்கொடுமை

இதனால், நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து எனது மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள் என தாய் கூறியுள்ளார். அதன்பின் முதல் மகளான சிறுமியின் எதிர்ப்பை மீறியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குழந்தை கேட்ட 2வது கணவன் - மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து கர்ப்பமாக்கிய கொடூர தாய்! | Andhra Woman Allowed Husband To Rape Daughters

அதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் வாரிசு வேண்டுமென 2வது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமாகி ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

அதனை உடனே கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர். இதனால் தகராறு ஏற்படவே தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு தாயையும், சதீஷ்குமாரையும் கைது செய்துள்ளனர்.