2 காதலிகளும் கர்ப்பம் - குழந்தை பெற்ற பின் திருமணம் செய்த இளைஞர்!
இரண்டு காதலிகளும் குழந்தைப் பெற்ற பின் இளைஞர் திருமணம் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
2 காதலிகள்
தெலங்கனா, ஏர்ரபோரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திபாபு. இவர் பட்டப்படிப்பு படித்து இடையில் நின்றுவிட்டார். தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரியை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் தன்னுடைய முறைப்பெண் ஆன சுனிதாவையும் சத்திபாபு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் 2 காதலிகளுடனும் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதில் ஸ்வப்னாவுக்கு மகளும், சுனிதாவுக்கு மகனும் பிறந்துள்ளனர்.
திருமணம்
தொடர்ந்து, இரண்டு பெண்களின் பெற்றோர்களும் தாங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர் திருமண பத்திரிகையை வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து சத்திபாபு வீட்டில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஏற்கனவே திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஆகியோர் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை - ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு IBC Tamil
