பேபி சிட்டர் வேஷம்.. 16 சிறுவர்களை சீரழித்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்!
குழந்தை பாதுகாவலராக வேடம் போட்டு பல சிறுவர்களை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேபி சிட்டர்
அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா என்ற பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர் தனது அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" என விளம்பர படுத்தி தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் தன்னை காட்டிக்கொண்டார்.
இதற்காக இவர் அந்த நாட்டில் தேவையான சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளார். அந்நாட்டில் பலர் தனது குழந்தைகளை பேபி சிட்டர் பொறுப்பில் விட்டு செல்லும் பழக்கம் உண்டு. இதில் 2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளுமாறு மேத்யூ-விடம் விட்டு சென்றனர்.
கொடூரம்
இந்நிலையில், அவர் அந்த குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சட்டப்பட்டார். அந்த குழந்தையின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்பொழுது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது.
மேலும், இவர் 2014 முதல் 2019 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு பதிவு செய்து குற்றத்தை உறுதி செய்தது. மேலும், இவருக்கு குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.