ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் - ஈபிஎஸ்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Jul 09, 2024 03:00 PM GMT
Report

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் - ஈபிஎஸ்! | Armstrong Murder Edappadi Palaniswami Request

அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.

இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கள்ளச்சாராய சம்பவம்: தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன்!

கள்ளச்சாராய சம்பவம்: தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன்!

வலியுறுத்தல் 

இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக திரு. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் - ஈபிஎஸ்! | Armstrong Murder Edappadi Palaniswami Request

இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.