கள்ளச்சாராய சம்பவம்: தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன்!

Tamil nadu BJP
By Jiyath Jul 09, 2024 12:51 PM GMT
Report

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

எல்.முருகன் 

டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது.

கள்ளச்சாராய சம்பவம்: தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன்! | Armstrong Murder Cbi Probe Needed Says L Murugan

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்ட ஒழுங்கில் திமுக அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - அன்புமணி ராமதாஸ்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - அன்புமணி ராமதாஸ்!

விமான டிக்கெட் 

திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தனர். இதில் 40 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.

கள்ளச்சாராய சம்பவம்: தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன்! | Armstrong Murder Cbi Probe Needed Says L Murugan

ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுனா கார்கே யாரும் அந்த மக்களை சந்திக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக வழி காட்டும். விமான டிக்கெட் புக் செய்து கொடுக்கவும் தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.