உலகையே ஆட்டம் காண வைத்த கொடூர நோய் - ரெடியான தடுப்பூசி!
சிக்குன்குனியாவின் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்குன்குனியா
சிக்குன்குனியா ஒரு வளர்ந்து வரும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல். இந்த தொற்றின் அதிக ஆபத்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உள்ளது.
ஒரு வகையான காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, மூட்டுகளில் வீக்கம் அல்லது சொறி போன்றவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி கண்டுபிடிப்பு
இந்நிலையில், சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இது ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி “Ixchiq” என்ற பெயரில் விற்கப்படும். வட அமெரிக்காவில் 3,500 பேரிடம் இரண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில்,
Today, we approved the first chikungunya vaccine for individuals 18 years of age and older who are at increased risk of exposure to chikungunya virus. https://t.co/P0vN2yjZzW pic.twitter.com/rLqphefxpV
— U.S. FDA (@US_FDA) November 9, 2023
தடுப்பூசியின் காரணமாக தலைவலி, சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் குமட்டல் போன்றவை குறைகிறது.
Ixchiq தடுப்பூசியைப் பெற்றவர்களில் 1.6 சதவிதம் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.