எடப்பாடி பழனிசாமி கைதுக்கு எதிர்ப்பு - கரூரில் அதிமுகவினர் சாலை மறியல்

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Oct 19, 2022 07:17 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

ஈபிஎஸ் கைது - அதிமுகவினர் சாலை மறியல் 

சட்டமன்றத்தில் துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

AIADMK road blockade in Karur

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவர் திரு.வி.கா ஆகியோர் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் பேரணியாக திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.