ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் விபத்தின் காரணமாக பதவிக்கு வந்தவர்கள் : முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி
அதிமுகவில் தற்போது ஒற்றை தலமை யாருக்கு என்ற விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது, இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் சண்டையிட்டுக் கொள்வது சரியல்ல
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, செய்தியாளர்களிடம் பேசும் போது : "தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் சண்டையிட்டுக் கொள்வது சரியல்ல.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்? என கேள்வி எழுப்பினார் மேலும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஓபிஎஸ்-ஈபிஎஸ் பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச் செயலாளராக வந்தால் பரவாயில்லை.
விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள்;இருவருமே பதவியிலிருந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா?
கட்சி உடையும் ஆபத்து
அதிமுக இப்பொழுது ஜாதி கட்சியாக மாறி ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?அதிமுகவின் ஒற்றை தலைமையாக யார் வேண்டுமானாலும் வரலாம்; நான் கூட வரலாம். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சண்டையிட்டு கொள்வதால் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுகவை அழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக ஆறுகுட்டி கூறினார்
நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்