‘’ நீட் தேர்வில் மாயாஜாலம் செய்து பார்க்கிறார் முதலமைச்சர் ‘’ : ஒபிஎஸ் விமர்சனம்
அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கபட்டது, திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கவில்லை, திமுக பொங்கல் பரிசு வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது என ஓபிஎஸ் விமர்சம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.22-ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ‘அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கபட்டது,
ஆனால், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கவில்லை, திமுக பொங்கல் பரிசு வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது.
திமுகவுக்கு மக்களை பற்றி கவலை இல்லை, நீட் தேர்வில் தமிழக முதல்வர் மாயாஜாலம் செய்து பார்க்கிறார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளார்கள் என ஓ.பி.எ.ஸ் தெரிவித்துள்ளார் .