அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை!

Tamil Cinema Tamil TV Serials
By Sumathi May 07, 2024 10:22 AM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை யாழினி பேசியுள்ளார்.

நடிகை யாழினி 

சினிமா நடிகைகள் சமீபகாலமாக தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வரிசையில், நடிகை யாழினி அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.

actress yazhini

இவர் சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவர், "அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னையால்தான் பெண்கள் சினிமாவுக்கு போகக்கூடாதுனு சொல்வார்கள். தவறான ஃபீல்ட் இது இல்லை.

அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயம் எல்லா ஃபீல்டிலும் இருக்கிறது. ஒரு இடத்துக்கு போகும்போது அங்கு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். என்னையும் அட்ஜெஸ்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

அட்ஜெஸ்ட்மெண்ட்

அதனை செய்தால்தான் வாய்ப்பு கிடைக்க வேண்டுமா. அந்த ஐந்து நிமிடங்களில் என்ன கிடைக்கப்போகிறது. ஒன்றும் கிடையாது. ஆனால் அதையே செய்ய சொல்கிறார்கள். நாங்கள் ஆசைக்காக கஷ்டப்பட்டு இந்தத் துறையில் நடிக்க வருகிறோம்.

அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை! | Actress Yazhini About Adjustment Issue In Cinema

பிறகு ஏன் அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள். கேமராமேன், இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் கேட்கிறார்கள். நான் அட்ஜெஸ்ட் செய்யமாட்டேன் என்றதால் என்னுடைய சீன்களை படத்திலிருந்து எல்லாம் தூக்கியிருக்கிறார்கள்" என வேதனை தெரிவித்துள்ளார்.