சாதாரணமா அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க; அப்போ அதைதான் செய்வேன் - மனமுடைந்த கிரண்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை கிரண் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.
நடிகை கிரண்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். ஜெமினி, அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன்பின் கோவாவில் செட்டில் ஆனார். இதற்கிடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார். தற்போது, லியோ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்ஜெஸ்ட்மெண்ட்
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க திரும்பினேன். படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததும் சிலர் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டினர்.
சாதாரணமாக தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசுவார்கள். அந்த நேரங்களில் அதை தவிர்க்க அந்த இடத்திலிருந்து தான் வெளியேறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களாக திரைத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த அனுபவங்களை நடிகைகள் பலரும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.