நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு ; 9 பேரும் நேரில் ஆஜர் - அப்டேட்!

Tamil nadu Madurai Crime
By Swetha Feb 24, 2024 11:28 AM GMT
Report

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் 9 குற்றவாளிகளும் ஒரு வருடத்திற்கு பின்  நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாலியல் வழக்கு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரோன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

pollachi abuse case

இவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 8 பெண்களும் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வாக்குமூலம் கொடுத்தனர். குற்றவாளிகளுக்கு தொடர்புடைய இடங்களை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த 2021 ம் ஆண்டு குற்ற பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.

‘’ இந்த வழக்குல கொடுக்குற தண்டனை  இந்தியாவுக்கே உதாரணமா இருக்கும் ’’   - பேரவையில் முதலமைச்சர் அதிரடி பேச்சு

‘’ இந்த வழக்குல கொடுக்குற தண்டனை இந்தியாவுக்கே உதாரணமா இருக்கும் ’’ - பேரவையில் முதலமைச்சர் அதிரடி பேச்சு

நேரில் விசாரணை

இதனையடுத்து, பிப்ரவரி மாதம் மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு அறையில் வைத்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை 9 பேருக்கும் நடத்தப்பட்டது.

கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸ் முறையில் விசாரணைக்கு ஆஜராகி வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு பின்  குற்றவாளிகள் மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு ; 9 பேரும் நேரில் ஆஜர் - அப்டேட்! | 9 Arrested Persons Appeared In Court

 சிபிஐ பறிமுதல் செய்த ஆவணங்களின் நகல்களை கேட்டு 9 பேரும் மனு தக்கல் செய்திருந்தனர். ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நகல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், மேற்கொண்ட விசாரணைக்கு பின் மார்ச்-1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.