அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது

pollachi abuse case person arrest now
By Anupriyamkumaresan Aug 14, 2021 04:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் துன்புறுதல் செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது | Pollachi Case Extra Person Arrest In Pollachi

அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்த் ஆகிய நால்வறையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஏற்கெனவே கைதாகியுள்ள சதீஷ் குமார் என்பவரின் நண்பரான பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவரை சி.பி.ஐ. போலீசார், பொள்ளாச்சியில் வைத்து தற்போது கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது | Pollachi Case Extra Person Arrest In Pollachi

முன்னதாக இந்த பாலியல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒன்பதாவதாக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.