ஒரு மாதம் கெடு.. 800 ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம், அரசு அதிரடி - என்ன காரணம்?
வெளிநாட்டில் 800 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.n
ஊழியர்கள்
அதிகமான மக்கள் வேலைக்காக தனது சொந்த ஊரில் இருந்து வெளிநாடுகளான சவுதி, துபாய், கத்தார் போன்ற நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்த பணி புரியும் ஊழியர்களுக்கு குவைத் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது சுமார் 800 வெளிநாட்டு பணியாளர்களை வேலை நீக்கம் செய்யவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வேலைக்கு சென்ற மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள் தங்கள் பணிக்கான ஒப்பந்தத்தை அடுத்த மாத இறுதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறி வருகின்றனர்.
அதில் குறிப்பாக உள்நாட்டு மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் அண்மையில், 1800 வெளிநாட்டு ஆசிரியர்களை குவைத் கல்வித்துறை அமைச்சகம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.