ஆவின் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை : நீதி மன்றம் உத்தரவு
By Irumporai
ஆவினில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
ஊழியர்கள் நீக்கம்
இதுதொடர்பான விசாரணையினை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இடைக்கால தடை
பணிநீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து தேர்வு நடைமுறைகளையும் பின்பற்றி நியமிக்கப்பட்ட பின் எந்த நோட்டீசும் கொடுக்காமல் பணிநீக்கம் என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.