ஒரே விந்தணு மூலம் 67 குழந்தைகள் - 10 குழந்தைகளுக்கு அரியவகை கேன்சர்
ஒரே விந்தணு மூலம் 67 குழந்தைகள் பிறந்துள்ளன.
67 குழந்தைகள்
ஐரோப்பாவில் ஒருவரின் விந்தணு மூலம் 67 குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டுள்ளன. அதில், 10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு மரபணு திரிபே காரணம் என தெரியவந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டு குழந்தையின் குடும்பத்தினர் தனித்தனியே விந்தணு மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
10 பேருக்கு கேன்சர்
அங்கு 2008ஆம் ஆண்டு விந்தணு பெறப்பட்டபோது இப்படியான மரபணு திரிபு கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், அந்த விந்தணு மூலம் கடந்த 2008 ஆண்டு முதல் 1015ஆம் ஆண்டு வரை மொத்தம் 67 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு மருத்துவர் ஒருவர், “விந்தணு தானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் அளவை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இது மரபணு நோயின் அசாதாரண பரவல்” என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.