ஆம்னி பஸ் மீது மின்னல் வேகத்தில் மோதிய வேன் - சிறுமி உட்பட 4 பேர் பலி
ஆம்னி பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர்.
கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மின்னல் வேகத்தில் சென்றது.
4 பேர் பலி
அதில் எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பலமாக மோதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிறுமி தக்சிகா (வயது 8), சிறுவன், சுற்றுலா வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாவிற்கு வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.