ஆசையாக விளையாடிய குழந்தைகள்.. ரசித்து பார்த்த தாயின் கண்முன்னே நடந்த கொடூரம்!

Tamil nadu Crime Krishnagiri
By Vidhya Senthil Oct 08, 2024 05:20 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

செங்கல் சூலையில் தேங்கி இருந்த தண்ணீருக்குள் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் -ஜானகி தம்பதியினர். இவர்களுக்கு மகன் தர்ஷ்வன் (வயது 12) மகள் பிரதிஷா (வயது 7) இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

2 kids death

இந்த நிலையில் நத்தம் கிராமத்தில் உள்ள அவரது சகோதரி மகாலட்சுமியை பார்க்க மஞ்சுநாதன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.அங்கு மகாலட்சுமி கணவர் கணபதி கணிசபாக்கம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து செங்கல் சூலை வியாபாரம் செய்து வருகிறார்.

இதனைப் பார்ப்பதற்காக மஞ்சுநாதன் -ஜானகி தனது இரண்டு குழந்தைகளுடன் அங்குச் சென்றுள்ளார்.அப்போது அப்பகுதியில் சூளை போடுவதற்காக மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.

பிறந்து 6 நாளே ஆன குழந்தையை கழிவறையில் புதைத்த தாய் - நண்பருடன் சேர்ந்து கொடூர செயல்

பிறந்து 6 நாளே ஆன குழந்தையை கழிவறையில் புதைத்த தாய் - நண்பருடன் சேர்ந்து கொடூர செயல்

இதன் அருகே மஞ்சுநாதனின் மகன் தர்ஷ்வன் மற்றும் மகள் பிரதிஷா இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீருக்குள் குழந்தைகள் விழுந்துள்ளனர்.

 2 குழந்தைகள்

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜானகி கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் சூளை ஆட்கள் தண்ணீருக்குள் மூழ்கிய இரு குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

crime

பின்பு உடனடியாக இரு குழந்தைகளையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட தாய் தந்தை இருவரும் கதறி அழுதனர்.

இதனைத் தொடர்ந்து கணிச பாக்கம் காவல்துறை அவர்களது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து கணிசபாக்கம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.