ஆசைவார்த்தை கூறி 18 வயது பெண்ணை பலருக்கு விருந்தாக்கிய இளைஞர் - கொடூரம்!

Coimbatore Sexual harassment Crime
By Vinothini Oct 20, 2023 05:00 AM GMT
Report

இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றிய இளைஞர்  

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் காதல் திருமணம் செய்து கொண்டு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணத்தால் கணவரை பிரிந்து, தனியாக வசித்து வந்தார். அப்பொழுது 26 வயதான பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனிமையில் வசிப்பதை அறிந்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

ஏமாற்றிய இளைஞர்

இதனால் அந்த பெண் அவரை நம்பி பாபுவுடன் மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளார். இவர் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை தங்க வைத்தார். அதன்பிறகு இவர் தனது நண்பர் ராகுல் (24) என்பவரை அழைத்து வந்துள்ளார், அப்பொழுது சிறிது நேரம் கழித்து அவர்கள் இந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர்.

தகாத உறவில் கணவர்.. வேலைக்காரனுடன் மனைவி கூட்டு - பாம்பை வைத்து பரலோகம் அனுப்ப பிளான்!

தகாத உறவில் கணவர்.. வேலைக்காரனுடன் மனைவி கூட்டு - பாம்பை வைத்து பரலோகம் அனுப்ப பிளான்!

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், அந்த பாபு தினம்னும் ஒருவரை அழைத்து வந்து அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார். உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார், அந்த பெண் மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இவர் பல இடங்களுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாபு கைது

நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டில் இருந்து தப்பித்தார். பெண்ணை கண்ட உறவினர்கள் அவரிடம் நடந்ததை விசாரித்தனர். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி பெண் அழுதார்.

பின், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, ராகுலை நேற்று இரவு கைது செய்தனர். தலைமறைவான பாபுவை தேடி வருகின்றனர்.